பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ. 3.13 லட்சம் மோசடி...

published 1 year ago

பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ. 3.13 லட்சம் மோசடி...

கோவை: கோவையில் பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ. 3.13 லட்சம் மோசடி நடைபெற்றது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சித்ரா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு செந்தூரான் மனைவி கிருபா(38). கடந்த 13ம் தேதி இவரது வாட்ஸ் ஆப்பில் குறுந்தகவல் வந்தது. அதில், ஆன்லைனில் பகுதி நேரம் வேலை இருப்பதாகவும், டாஸ்க்கை முடித்து கொடுத்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் லிங்க்கில் சென்று கிருபா தனது விவரங்களை பதிவு செய்தார். 

பின்னர் அவரை தொடர்பு கொண்ட நபர் தாங்கள் அனுப்பும் விளம்பரத்திற்கு ரேட்டிங் கொடுத்தால் அதிக பணம் கிடைக்கும் எனவும், அதற்கு சிறிது முதலீடு செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதனை நம்பிய கிருபா அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் சிறிது, சிறிதாக ரூ. 3.13 லட்சம் பணம் அனுப்பினார். ஆனால் அவர் சொன்னபடி வருமானம் கிடைக்கவில்லை. மொத்தமாக ரூ. 3.13 லட்சத்தை சுருட்டி விட்டனர். இதனால் ஏமாற்றமடைந்த கிருபா இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe