தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மனித சங்கலி போராட்டம் நடத்திய சிறு குறு தொழில்துறையினர்...

published 1 year ago

தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மனித சங்கலி போராட்டம் நடத்திய சிறு குறு தொழில்துறையினர்...

கோவை: தமிழ்நாடு சிறு குறு தொழில் கூட்டமைப்புகள் ஒன்றிணைந்து தொழில்துறை மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 8-வது கட்ட போராட்டமாக மனித சங்கிலி போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே கோவை மாவட்ட சிறுகுறு தொழில் அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.

இதில் தமிழக அரசை  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தொழிலாளர்கள் கைகோர்த்து நின்று கோரிக்கையை வலியுறுத்தினர்.
குறிப்பாக 430% நிலை கட்டணம் முழுமையாக திரும்ப பெற வேண்டும், 2 ஆண்டுக்கு கட்டண உயர்வு இருக்க கூடாது,
12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பிற்கு 3A 1 Tariff மாற்ற வேண்டும்,பீக் ஹவர் கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும், சொந்த தொழில் கூடங்கள் மேல் அமைக்கும் சோலாருக்கான கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதில் சுமார் 600க்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனத்தினர், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe