கோவையில் டாக்டர் சீட் வாங்கித்தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி…

published 1 year ago

கோவையில் டாக்டர் சீட் வாங்கித்தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி…

கோவை:  மகளுக்கு டாக்டர் சீட் வாங்கி தருவதாக கூறி ஓமன் நாட்டை சேர்ந்தவரிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்ததாக கோவையை சேர்ந்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஓமன் நாட்டை சேர்ந்தவர் கிளமண்ட் இளங்கோ(60). இவர் தனது மகளை வேலூர் மருத்துவக்கல்லூரி அல்லது கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க விருப்பப்பட்டார். 
அதற்காக அவர் முயற்சி செய்து வந்த போது, கோவையை சேர்ந்த இர்பின், செந்தில்குமார் மற்றும் ஷர்மிளா ஆகியோரின் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது 3 பேரும் சேர்ந்து கிளமண்ட் இளங்கோவிடம் நீங்கள் ரூ. 50 லட்சம் கொடுத்தால் உங்கள் மகள் விருப்பப்படி மருத்துவக்கலூரியில் சேர்த்து விடுவதாக தெரிவித்தனர்.

இதனை நம்பிய கிளமண்ட் இளங்கோ அவர்களிடம் ரூ. 50 லட்சத்தை கடந்த 2018ம் ஆண்டு கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் பணத்தை பெற்று கொண்ட பின்பு அவர்கள் கூறிய படி மருத்துவக்கலூரியில் சீட் வாங்கி தரவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த கிளமண்ட் இளங்கோ கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பீளமேடு போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் இர்பின், செந்தில்குமார், ஷர்மிளா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe