துடியலூரில் பழம் வாங்கிவிட்டு நடந்து வந்த பெண்ணிடம் கைவரிசை

published 1 year ago

துடியலூரில் பழம் வாங்கிவிட்டு நடந்து வந்த பெண்ணிடம் கைவரிசை

கோவை: கோவை துடியலூரில் பெண்ணிடம் 8 பவுன் செயின் பறித்து சென்ற பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையம் ராகுல் காந்தி நகரை சேர்ந்தவர் ஜானகி(63). இவர் நேற்று வீட்டருகே தள்ளுவண்டியில் பழம் வாங்கி கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென ஜானகியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க செயினை பறித்தனர். 
இதனால் அதிர்ச்சியடைந்த ஜானகி கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் செயின் பறித்த இருவரும் நகையுடன் பைக்கில் தப்பி சென்றனர்.

இது குறித்து ஜானகி துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe