கோவையில் புத்தாண்டு இரவில் 70 முகாம்கள்

published 1 year ago

கோவையில் புத்தாண்டு இரவில் 70 முகாம்கள்

கோவை: புத்தாண்டு தினத்தையொட்டி இன்றிரவு முக்கிய சாலைகளில் போலீசார், 70 முகாம்களை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

புத்தாண்டு தினத்தையொட்டி மாநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டை கொண்டாடுவதற்கு தேவையான முன்னேற்பாட்டுப் பணிகள் நடந்து வருகிறது.

அங்கு செல்ல பொதுமக்களும் தயாராகி வருகின்றனர். அதேபோல், புத்தாண்டு தினத்தையொட்டி, 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில் இளைஞர்கள் சாலைகளில் விதிமுறைளை மீறி அட்டகாசம் செய்வதை தடுக்க போலீசார் முக்கிய இடங்களில் முகாம்கள் அமைத்து அவர்களை கட்டுப்படுத்த உள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர்கள் விதிமுறைகளை மீறுவதை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர். அதன்படி மாநகரில் முக்கிய சாலைகளான அவிநாசி ரோடு, திருச்சி ரோடு,

சக்தி ரோடு, பொள்ளாச்சி ரோடுகளில், 70க்கும் மேற்பட்ட இடங்களில் டெண்ட் மூலம் முகாம்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளளர். மேலும் அந்த முகாம்கள் அமைந்துள்ள இடங்களில் இரவு, 11:55 மணி முதல் சரியாக, 10 நிமிடம் சாலைகள் அடைக்கப்படும்.

அப்போது அங்குள்ள இளைஞர்கள், பொதுமக்கள் அந்தந்த இடங்களிலேயே புத்தாண்டை கொண்டாடலாம், கேக் வெட்டி கொள்ளலாம். அதேபோல விதிமுறைகளை மீறி அட்டகாசத்தில் ஈடுபடுபவர்கள், மதுபோதையில் இருப்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்,” என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe