சரவணம்பட்டியில் மாஜி தபால் ஊழியர் வீட்டில் கைவரிசை

published 1 year ago

சரவணம்பட்டியில் மாஜி தபால் ஊழியர் வீட்டில் கைவரிசை

கோவை: கோவை சரவணம்பட்டியில் மாஜி தபால் ஊழியர் வீட்டில் நகை திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை சின்னவேடம்பட்டி முருகன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(63). இவர் தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலையில், அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ராஜேந்திரனை போனில் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தனர். உடனே ராஜேந்திரன் ஈரோட்டில் இருந்து கோவை திரும்பி வீட்டுக்கு சென்றார்.

அப்போது வீட்டு பீரோவில் இருந்த 4 1/4 பவுன் தங்க நகை திருடு போனது. நள்ளிரவில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர் திருடி சென்றுள்ளார். 
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe