கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை:கோவையில் நாளை (4ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகளை  மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ஜன.,4ம் தேதி கோவையில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சரவணம்பட்டி துணை மின் நிலையம்

சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்ன வேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்த புரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், கவுண்டர் மில், சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதுார், மணியகாரம்பாளையம் ஒருபகுதி,

லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதிபுதுார், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட்.

மதுக்கரை துணை மின் நிலையம்

க.க.சாவடி, பாலத்துறை, பை - பாஸ் ரோடு, சாவடி புதுார், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர்.,நகர், சுகுணாபுரம், பி.கே.புதுார், மதுக்கரை, அறிவொளி நகர் மற்றும் கோவை புதுார் ஒருபகுதி.

செங்கத்துறை துணை மின் நிலையம்

செங்கத்துறை, காடாம்பாடி, ஏரோ நகர், காங்கயம் பாளையம், பி.என்.பி., நகர், மதியழகன் நகர்.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe