தமிழகத்தில் 9ம் தேதி முதல் பேருந்துகள் இயங்காது... ஸ்டிரைக் அறிவித்த தொழிற்சங்கங்கள்!

published 1 year ago

தமிழகத்தில் 9ம் தேதி முதல் பேருந்துகள் இயங்காது... ஸ்டிரைக் அறிவித்த தொழிற்சங்கங்கள்!

சென்னை: அரசுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை என்று கூறி வரும் 9ம் தேதி முதல் ஸ்டிரைக் அறிவித்துள்ளன போக்குவரத்து தொழிற்சங்கங்கள். இதனால் அரசு பேருந்துகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் பேச்சுவார்த்தையை அரசு தொடங்கவில்லை. 

இதேபோல் காலியாக இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வின் ஓய்வூதியர்களுக்கும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. 

இதனிடையே போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இதில் அரசு எந்த விதமான உறுதியும் அளிக்கவில்லை என்பதால் வரும் 9ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். 

இதனால் வரும் 9ம் தேதி முதல் தமிழக முழுவதும் அரசு பேருந்துகளை இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe