ரத்தினபுரியில் "மனைவியுடன் பேசாதே" என்று கூறிய கணவருக்கு கத்திக்குத்து

published 2 years ago

ரத்தினபுரியில் "மனைவியுடன் பேசாதே" என்று கூறிய கணவருக்கு கத்திக்குத்து

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவையில் தனது மனைவியுடன் நண்பர் பேசியதைக் கண்டித்த கணவருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.

ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் மணி (பெயர்  மாற்றப்பட்டுள்ளது.) இவரது நண்பர் சந்தோஷ். இவர்கள் இருவரும் மணியின் வீட்டில் மது அருந்துவது வழக்கம். இதனிடையே சந்தோஷ் மற்றும் மணியின் மனைவிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதைப் பார்த்த மணி தனது மனைவியை கண்டித்துள்ளார். நேற்று சந்தோஷ் மற்றும் மணியின் மனைவி ஆகிய இருவரும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த மணி, சந்தோஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றிவிடவே இருவரிடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சந்தோஷ் மணியை கத்தியால் குத்தி தாக்கினார்.

இதுகுறித்து மணி ரத்தினபுரி போலீசாரிடம் புகார் அளித்தார்.  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். Q

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe