கோவையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மதபோதகர் கைது

published 2 years ago

கோவையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மதபோதகர் கைது

 

கோவை: கோவையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் 17 வயது சிறுமி தனது தங்கையுடன் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்த சிறுமி வசிக்கும் வீட்டின் அருகே மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த மதபோதகர் ஸ்டீபன் ராஜ் என்பவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வாரந்தோறும் ஜெபக்கூடம் நடத்தி வந்துள்ளார். இவர் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் ஊர் ஊராகச் சென்று ஜெபம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமி உள்ள பகுதிக்கு வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் பாட்டி இரு சிறுமிகளையும் வீட்டிற்குள் வைத்து தாளிட்டு விட்டு  கடைக்குச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட ஸ்டீபன்ராஜ் சிறுமியின் வீட்டின் கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

சிறுமியின் தங்கையை ஒரு அறையில் வைத்து தாளிட்ட ஸ்டீபன்ராஜ், 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டதால்  ஸ்டீபன் ராஜ்  அங்கிருந்து தப்பிச் சென்றார். சிறுமி இது குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மதபோதகர் ஸ்டீபன் ராஜ் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் சிறார்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe