ரயில்வேயில் வேலை... வலை விரித்து ரூ.10 லட்சத்தை சுருட்டியதாக கோவை தம்பதி மீது வழக்கு!

published 1 year ago

ரயில்வேயில் வேலை... வலை விரித்து ரூ.10 லட்சத்தை சுருட்டியதாக கோவை தம்பதி மீது வழக்கு!

கோவை: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 9.50 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் மாலைகண்ணன்(36). இவர் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், கோவைப்புதூரை சேர்ந்த ஜெரால்டு ரூபன்(45) எனக்கு அறிமுகமானார்.

அப்போது அவர் என்னிடம் ரூ. 10 லட்சம் கொடுத்தால் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினார். இதனை நம்பி நான் கடந்த 2019ம் ஆண்டு இரண்டு கட்டங்களாக ஜெரால்டு ரூபன் வங்கி கணக்கில் ரூ. 10 லட்சம் அனுப்பினேன்.

ஆனால் பணத்தை பெற்று கொண்ட பின் அவர் எனக்கு வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது ரூ. 50 மட்டும் கொடுத்தார். மீதமுள்ள ரூ.9.50 லட்சத்தை தராமலும், வேலை பெற்று தராமலும் தொடர்ந்து கால தாமதம் செய்து வருகிறார். இதற்கு அவரது மனைவி ரூபாவும் உடந்தையாக செயல்பட்டார். எனவே இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

அந்த புகாரின் பேரில், குனியமுத்தூர் போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் கோவைப்புதூரை சேர்ந்த ஜெரால்டு ரூபன் மற்றும் அவரது மனைவி ரூபா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe