புதிய பென்ஷன் திட்டத்திற்கு எதிர்ப்பு- ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்...

published 1 year ago

புதிய பென்ஷன் திட்டத்திற்கு எதிர்ப்பு- ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்...

கோவை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்திற்கு பல்வேறு மத்திய அரசு துறை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதனை ரத்து செய்ய வேண்டியும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டியும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் நூதன போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கோவை ரயில் நிலையம் முன்பு ரயில்வே ஊழியர்கள்(SRMU) தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். SRMU மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர், சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் உட்பட 300க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe