ரூ.1.80 லட்சம் செம்பு கம்பி திருட்டு…

published 1 year ago

ரூ.1.80 லட்சம் செம்பு கம்பி திருட்டு…

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் கண்ணுசாமி ரோட்டை சேர்ந்தவர் ரோனத் போர்வல்(31). இவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், ரோனத் நேற்று கடையில் உள்ள பொருட்களின் இருப்பு விவரத்தை சரிபார்த்தார். அப்போது ரூ. 1.80 லட்சம் மதிப்பிலான 200 கிலோ செம்பு கம்பிகள் திருடு போனது தெரியவந்தது. 

இது குறித்து ரோனத் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe