நகை வியாபாரியிடம் ரூ. 20 லட்சம் மதிப்பிலான தங்கம் மோசடி...

published 1 year ago

நகை வியாபாரியிடம் ரூ. 20 லட்சம் மதிப்பிலான தங்கம் மோசடி...

கோவை: கோவையில் நகை வியாபாரியிடம் ரூ. 20 லட்சம் மதிப்பிலான தங்கம் மோசடி நடைபெற்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கடைவீதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன்(51). நகை வியாபாரி. இவர் கோவையை சேர்ந்த விஷ்வநாதன் என்ற நகை வியாபாரியிடம் ரூ. 20 லட்சம் மதிப்பிலான 404 கிராம் நகைகளை கொடுத்து தங்க கட்டியாக திருப்பி கொடுக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நகைகளை பெற்றுக்கொண்ட விஷ்வநாதன் தங்க கட்டியாக திருப்பி கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். 

செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து ஸ்ரீதரன் கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் விஷ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe