கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல் உட்பட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

published 1 year ago

கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல் உட்பட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

கோவை: கோவை, நீலகிரி உட்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரம் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவு காணப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களும்  கனமழை வெள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திண்டுக்கல் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த சூழலில், 14 மாவட்டங்களில் இன்று (9ம் தேதி) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இன்று மாலை தொடங்கி நாளை காலை வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை, திருப்பூர், நீலகிரி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe