மொபட்டில் தவறி விழுந்து வாலிபர் பலி…

published 1 year ago

மொபட்டில் தவறி விழுந்து வாலிபர் பலி…

கோவை: கோவை காளப்பட்டி ரோடு நேரு நகரை சேர்ந்தவர் ராம்குமார்(29). நேற்று இவர் இருகூர் - சின்னியம்பாளையம் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி ராம்குமார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் தலை, நெற்றி உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்து அவர் இறந்தார். 

போலீசார் உடலை மீட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe