டவுன்ஹாலில் ஜேப்டிக்கு முயன்ற பெண்; கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்!

published 1 year ago

டவுன்ஹாலில் ஜேப்டிக்கு முயன்ற பெண்; கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்!

கோவை:கோவை கண்ணபிரான் மில் ரோட்டை சேர்ந்தவர் சரஸ்வதி(61).

இவர் நேற்று பேருந்தில் டவுன்ஹாலில் இருந்து உக்கடம் சென்றார். அப்போது அருகே நின்றிருந்த பெண் ஒருவர் நைசாக சரஸ்வதி கைப்பையில் வைத்திருந்த ரூ. 5 ஆயிரத்தை திருடி தப்பி செல்ல முயன்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி கூச்சல் போட்டார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்து உக்கடம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பணம் திருடியது திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்த செல்வகுமார் மனைவி சுமதி(31) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe