கோவையில் மாட்டு வண்டி ஓட்டிய போலீஸ் கமிஷனர்!

published 1 year ago

கோவையில் மாட்டு வண்டி ஓட்டிய போலீஸ் கமிஷனர்!

கோவை: தமிழகத்தில் பல்வேறு அரசு, தனியார் கல்லுாரிகள், அலுவலகங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படது.

இதன் ஒரு பகுதியாக கோவை அவிநாசி ரோட்டில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் போலீசாருக்கும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதில் போலீஸ் குடும்பத்தினர் உரியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்குப்போட்டி, மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். அதன் பின் மாநகர் போலீசார் சார்பில் பொங்கல் வைத்தல், நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாட்டு வண்டி ஓட்டி அனைவரையும் உற்சாக படுத்தினார். அதை தொடர்ந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற போலீசார் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe