அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

published 1 year ago

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

கோவை: ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பொதுமக்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அயோத்தியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குழந்தை வடிவில் கருவறையில் ராமர் சிலை இன்று வைக்கப்பட்டுள்ளது. தமிழக கலைஞர்கள் செய்த கதவு கோயிலில் இடம்பெற்றுள்ளது. தங்கக் கதவுகளால் கோயில் கருவறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 22ஆம் தேதி அரை நாள் விடுமுறை விடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe