குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்- கண்டித்த வாலிபர்கள் மீது தாக்குதல்...

published 1 year ago

குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்- கண்டித்த வாலிபர்கள் மீது தாக்குதல்...

கோவை: கோவைப்புதூரை சேர்ந்தவர் ராவுத்த குமார்(31). சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் நேற்று அதிகாலை 2.30 மணியளவில், காரில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அறிவொளி நகரில் உள்ள பேக்கரி அருகே சென்ற போது கார் பழுதானது. இதனால் காரை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவரிடம், கார் பழுதானதாக தெரிவித்தனர். 

இதனைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவர் காரை பார்வையிட்டு கிளட்ச் பழுதாகி விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரும் ஆட்டோவில் தங்களை வீட்டில் இறக்கி விடுமாறு தெரிவித்துள்ளனர். அப்போது ஆட்டோ டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைப்பார்த்த ராவுத்தகுமாரும், அவரது நண்பரும் அவரை கண்டித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் தகாத வார்த்தைகளால் பேசி ராவுத்தகுமாரின் நண்பரை தாக்கி, கார் முன்பக்க கண்ணாடியை உடைத்ததாக தெரிகிறது. இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கார் கண்ணாடியை உடைத்து வாலிபரை தாக்கியது சுகுணாபுரம் கிழக்கு செந்தமிழ் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தனுஷ்(37) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe