கோவையில் விஷப்பூச்சி கடித்து பெண் பலி

published 2 years ago

கோவையில் விஷப்பூச்சி கடித்து பெண் பலி

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவையில் விஷப்பூச்சி கடித்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

கோவை குறிச்சி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் உசெய்னர் (68).இவரது மனைவி கமருநிஷா (65). கடந்த 17ஆம் தேதி கமருநிஷா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென ஏதோ ஒரு பூச்சி கடித்துள்ளது.

இதனால் அவர் அலறியடித்து எழுந்தார். மேலும் இது குறித்து அக்கம்பக்கத்தினரிடையே கூறினார். மறுநாள்  அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி கமருநிஷா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe