குனியமுத்தூரில் தகராறில் வாலிபரின் செயினை பறித்துச் சென்ற கும்பல்!

published 1 year ago

குனியமுத்தூரில் தகராறில் வாலிபரின் செயினை பறித்துச் சென்ற கும்பல்!

கோவை: கோவையில் பைக் மோதியதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கி செயின் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
 

கோவை குனியமுத்தூர் சின்னசாமி பன்னாடி தெருவை சேர்ந்தவர் ரகுவரன்(38). இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் கோபாலன் என்பவருடன் சென்று கொண்டிருந்தார். அவர்கள் அத்திப்பாளையம் ரோடு ஓம் சாந்தி நகர் ஜங்சனில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் பைக்கில் வந்த 2 பேர் ரகுவரன் பைக் மீது மோதினர். இதில் கோபாலன் கீழே விழுந்தார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த அந்த 2 பேரும் போனில் பேசி மேலும் 2 பேரை அங்கு வரவழைத்தனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து ஹெல்மெட்டால் ரகுவரனை தாக்கினர். இதில் அவருக்கு மூக்கு, கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து 4 பேரும் ரகுவரனை மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயினை பறித்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். 

இது குறித்து ரகுவரன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தாக்கி செயின் பறித்த 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe