MYV3 Ads நிறுவனத்திற்கு எதிராக மீண்டும் கோவையில் வழக்கு?

published 1 year ago

MYV3 Ads  நிறுவனத்திற்கு எதிராக மீண்டும் கோவையில் வழக்கு?

கோவை: MYV3Ads நிறுவனத்தின்  மீது மீண்டும் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

MYV3Adsஎன்ற ஆன்லைன் செயலி நிறுவனத்தினர் பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்வதாக கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து அந்த நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கு அந்த நிறுவனத்தின் மூலம் மாதந்தோறும் நிலையான வருவாய் பெரும் மக்களும், நிறுவனத் தரப்பும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிறுவனத்தில், 50 லட்சம் மக்கள் முதலீடு செய்துள்ள நிலையில் அவர்களுக்கு முறையாக வருவாய் கொடுக்கப்பட்டு வருவதாகவும், பொய்புகார் அளிக்கப்பட்டதாகவும்  நிறுவன தரப்பில் கூறப்பட்ட நிலையில்,

MYV3 Ads  நிறுவனத்திற்கு ஆதரவாக நீலம்புர் பைபாஸ் சாலையில் நேற்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் பேருந்துகள் மூலமாக கோவைக்கு வந்து குவிந்தனர். இதனால் சம்பவ இடத்தில் போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

இந்த சூழலில், அனுமதி இன்றி கூடுதல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் கோவை மாநகர போலீசார் இன்னும் இதனை உறுதிப்படுத்தவில்லை.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe