குஜராத் சென்று வெற்றிக்கொடி நாட்டிய கோவை கராத்தே மாணவர்கள்!

published 1 year ago

குஜராத் சென்று வெற்றிக்கொடி நாட்டிய கோவை கராத்தே மாணவர்கள்!

கோவை: குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அண்மையில் 13 வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலத்தில் நடைபெற்றது.மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழ்நாடு,கேரளா, மகாராஷ்டிரா,மேற்கு வங்காளம்,கோவா,குஜராத் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டனர்.கட்டா,குமித்தே என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற கராத்தே போட்டியில் சப் ஜூனியர், ஜூனியர், கேடட்,சீனியர் அடிப்படையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொண்ட கோவை மை கராத்தே இன்டர்நேஷனல்  கராத்தே பள்ளியை சேர்ந்த 25 மாணவ மாணவிகள் மூன்று தங்கம், 5 வெள்ளி,17 வெண்கல பதக்கம்  வென்று அசத்தினர்.வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து இதில் வெற்றி பெற்றவர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் கராத்தே போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe