காந்திபுரத்தில் குடி போதையில் பள்ளி மாணவர்களை தாக்கிய இருவர் கைது

published 2 years ago

காந்திபுரத்தில் குடி போதையில் பள்ளி மாணவர்களை தாக்கிய இருவர் கைது

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/EjTtcBnBSk61kfgvff3n15   

கோவை: காந்திபுரம் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் பள்ளி மாணவர்களை தாக்கி இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் வியாழக்கிழமை பள்ளி முடிந்து காந்திபுரம் பேருந்து  நிலையம் வந்தனர். அவர்கள் கணபதி பேருந்தில் ஏறியபோது அங்கு இரண்டு பேர் குடிபோதையில் இருந்தனர். இதனிடையே குடிபோதையில் இருந்த வாலிபர்கள் பள்ளி மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டு, அவர்களை பேருந்தில் இருந்து கீழே இறங்கக் கூறி அடித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து போதையில் பள்ளி மாணவர்களை தாக்கிய இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர்கள் கணபதி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (28). டிரைவர்.  டாட்டு போடும் வேலை செய்யும் வருண்மேனன் (26) என்பது தெரியவந்தது. தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe