குஜராத் வியாபாரியிடம் வேதிப்பொருள்கள் வாங்கி மோசடி- கோவையை சேர்ந்த நபர்கள் கைது...

published 1 year ago

குஜராத் வியாபாரியிடம் வேதிப்பொருள்கள் வாங்கி மோசடி- கோவையை சேர்ந்த நபர்கள் கைது...

கோவை: குஜராத் வியாபாரியிடம் ஆன்லைனில் பொட்டாசியம் குளோரைடு வாங்கி ரூ. 2.08 லட்சம் மோசடி செய்த கோவையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர் சர்கம்ஷா(44). உர மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவரது நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து கோவையை சேர்ந்த 4 பேர் ரூ. 2.08 லட்சம் மதிப்பிலான பொட்டாசியம் குளோரைடு வாங்கினர். பணத்தை உடனே அனுப்பி விடுவதாக தெரிவித்த இவர்கள் நீண்ட நாட்கள் ஆகியும் பணம் அனுப்பவில்லை. 

சர்கம்ஷா கேட்டபோது, 4 பேரும் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இது குறித்து சர்கம்ஷா கோவை ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், ரூ. 2.08 லட்சம் மதிப்பிலான பொட்டாசியம் குளோரைடு வாங்கி மோசடியில் ஈடுபட்டது கோவை உக்கடம் பொன்விழா நகரை சேர்ந்த அன்வர் சதாத்(51), கரும்புக்கடை அண்ணாகாலனியை சேர்ந்த இதயத்துல்லா(36), கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த முகமத் அர்ஷாத்(33), வடவள்ளி மருதம் நகரை சேர்ந்த வில்சன் ராபின்(38) என்பது தெரியவந்தது. 

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இவர்கள் பொட்டாசியம் குளோரைடு வாங்கி அதில், சில வேதிப்பொருட்களை கலந்து வெடிபொருட்கள் என கூறி மோசடியாக ஆன்லைனில் விற்க முயன்றதாகவும் தெரிகிறது. இதனையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe