ரூ.29 விலையில் பாரத் அரிசி; அடுத்த வாரம் கிடைக்கும்!

published 1 year ago

ரூ.29 விலையில் பாரத் அரிசி; அடுத்த வாரம் கிடைக்கும்!

கோவை: அரிசி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மானிய விலையில் பாரத் அரிசியை அடுத்த வாரம் முதல் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்ந்து விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு சார்பில் கோதுமை மாவு பாரத் ஆட்டா என்ற பெயரில் ஒரு கிலோ ரூ.27.50க்கும், பருப்பு வகைகள் பாரத் டால் என்ற பெயரில் கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதனிடையே அரிசி விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு சார்பில் பாரத் அரிசியை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டது. கிலோ ரூ.25க்கு இந்த அரிசி கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியான நிலையில் பாரத் அரிசி விற்பனை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு, கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலமாக பாரத் அரிசி விற்பனை செய்யப்பட உள்ளது.

கிலோ ரூ.29க்கு பாரத் அரிசியை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த வாரம் முதல் பாரத் அரிசி விற்பனை துவங்க உள்ளது.

சில்லறை மற்றும் மொத்த விற்பனையில் அரிசி விலையேற்றம் தொடர்ந்து அதிகரிப்பதால் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாரத் அரிசி அடுத்த வாரம் முதல் கடைகளில் 5 மற்றும் 10 கிலோ பைகளில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இணையம் மூலமும் இதனை வாங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தல் வியூகமாக மத்திய பா.ஜ., அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துகிறது.

இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe