கோவையில் கஞ்சா விற்ற பட்டதாரி வாலிபர் சிக்கினார்…

published 1 year ago

கோவையில் கஞ்சா விற்ற பட்டதாரி வாலிபர் சிக்கினார்…

கோவை: கோவை சரவணம்பட்டி போலீசார் நேற்று ரோந்து பணி சென்றனர். அப்போது சரவணம்பட்டி சத்தி ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் அருகே வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அவரை போலீசார் சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். 

போலீசார் அவரிடம் சோதனை செய்த போது அவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரவணம்பட்டியை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி அஸ்வின்(35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 115 கிராம் கஞ்சா, கூல் லிப், சுவாகத் பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe