ஏ.டி.எம்., இயந்திரத்தில் நிரப்ப வைத்திருந்த ரூ. 10 லட்சம் மாயம்...!

published 1 year ago

ஏ.டி.எம்., இயந்திரத்தில் நிரப்ப வைத்திருந்த ரூ. 10 லட்சம் மாயம்...!

கோவை: கோவை தனியார் நிறுவனத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப வைத்திருந்த ரூ. 10 லட்சம் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி எப்சிஐ ரோட்டில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் தனியார் வங்கி ஏடிஎம்-களுக்கு ஊழியர்கள் மூலம் பணம் நிரப்பப்படுவது வழக்கம்.

இந்நிலையில், நிறுவனத்தின் ஒரு அறையில் ஏடிஎம் மையங்களுக்கு அனுப்புவதற்காக பெட்டிகளில் லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்ததாக தெரிகிறது.

அங்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையே அறையில் இருந்த ஒரு பெட்டி காணாமல் போனது. அந்த பெட்டியில் ரூ. 10 லட்சம் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து நிறுவன பாதுகாவலர் ஒருவர் மேலாளரை தொடர்பு கொண்டு தெரிவித்தார். அவர் உடனே சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe