கோவையில் பேன்சி கடையில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்து- பேன்சி பொருட்கள் தீயில் எரிந்து நாசம்...

published 1 year ago

கோவையில் பேன்சி கடையில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்து- பேன்சி பொருட்கள் தீயில் எரிந்து நாசம்...

கோவை: கோவை தொப்பம்பட்டி அருகே நள்ளிரவில் பேன்சி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

கோவை தொப்பம்பட்டி அருகே மேட்டுப்பாளையம் சாலையில் தனியாருக்கு சொந்தமான பேன்சி கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையின் உரிமையாளர் கடையை பூட்டி விட்டு சென்ற நிலையில், நள்ளிரவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனைப் பார்த்து அக்கம்பக்கதினர் உடனடியாக தீயணைப்புத் துறைவிற்கு தகவல் அளித்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பேன்சி கடைக்குள் இருந்த பொருட்கள் முற்றிலும் தீயில் கருகி தீக்கிரையாகின.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள துடியலூர் போலீசார் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு  காரணங்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe