கோவையில் ஆட்டோவில் பேட்டரி திருடியவர் சிக்கினார்…

published 1 year ago

கோவையில் ஆட்டோவில் பேட்டரி திருடியவர் சிக்கினார்…

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோட்டை சேர்ந்தவர் மாரிமுத்து(42). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று ஆட்டோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோடு பார்க் அருகே நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு நைசாக வந்த வாலிபர் ஒருவர் ஆட்டோவில் மாட்டியிருந்த சுமார் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியை திருட முயன்றார். 

இதனை பார்த்த மாரிமுத்து உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பேட்டரி திருடியது கோவைப்புதூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிமாறன்(31) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe