பஞ்சுமிட்டாய்களை சாப்பிடாதீர்.. எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை..!

published 1 year ago

பஞ்சுமிட்டாய்களை சாப்பிடாதீர்.. எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை..!

கோவை: பஞ்சு மிட்டாய் களில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயன கலவை உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கடற்கரையோம் விற்பனை செய்யப்படும் பஞ்சுமிட்டாய்களில் தரம் இல்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து அவற்றை பரிசோதனை செய்த சுகாதாரத்துறையினர். அதில் ரசாயன கலவை இருப்பதை அடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த பஞ்சுமிட்டாய்களை, ஆய்வகத்தில் பரிசோதனை செய்த போது அதிர்ச்சிகர தகவல் கிடைத்துள்ளது.

இந்தப் பஞ்சு மிட்டாய்களில் ரோட்டோமைன் பி என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயன கலவை இருப்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

எனவே பஞ்சுமிட்டாய்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் பொதுமக்கள் யாரும் சாப்பிட வேண்டாம் என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது மேலும் கெமிக்கல் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe