கோவையில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நண்பனை அடித்து மிரட்டிய நபர்…

published 1 year ago

கோவையில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நண்பனை அடித்து மிரட்டிய நபர்…

கோவை: தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் திருபதி வயது 28. இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியபோது அங்கு கோவிந்தன் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது இந்நிலையில் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். 

இந்நிலையில் கோவிந்தன் என்பவர் நிலம் ஒன்றை பதிவு செய்வதற்காக திருபதியிடம் பணம் கேட்டுள்ளார். அதனை இரண்டு நாட்களுக்குள் திருப்பித் தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய திருபதி கோவிந்தனிடம் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். 

ஆனால் கோவிந்தன் இரண்டு வருடங்களாகியும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இந்நிலையில் ஹரிஷ் என்பவர் திருபதியை தொடர்பு கொண்டு கோவிந்தன் உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திரும்பப் பெற கோவை ராமானுஜம் பேருந்து நிறுத்தம் அருகே வருமாறு கூறியுள்ளார். உடனடியாக கோவைக்கு வந்த திருபதி அங்கே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஹரிஷ் ,சூர்யா மற்றும் பிரகாசம் ஆகிய மூன்று பேர் திருபதியை அழைத்துக்கொண்டு கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம் உள்ள காலி இடத்தில் வைத்து அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டு கால்களால் உதைத்து விரட்டி உள்ளனர்.

பின் அவர் வைத்திருந்த செல்போனையும் அவரிடம் இருந்து பரித்துள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து திருபதி கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe