கோவையில் கடையின் ஷட்டரை உடைத்து ரூ. 6 லட்சம் திருடிய ஊழியர்...

published 1 year ago

கோவையில் கடையின் ஷட்டரை உடைத்து ரூ. 6 லட்சம் திருடிய ஊழியர்...

கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் கேகே லைன் முதல் தெருவில் சந்தோஷ்(45) என்பவர் ‘பாரத் லைட்ஸ்’ என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல கடையை திறந்து வியாபாரம் செய்தார். பின்னர் இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். 

நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த ரூ. 6 லட்சத்தை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்தோஷ் கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். 

அதில், கடை ஊழியர் ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ் என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்ததாக தெரிகிறது. மேலும் அவர் நேற்று வேலைக்கு வரவில்லை என்றும் தெரிகிறது. இது குறித்து சந்தோஷ் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை ஷட்டரை உடைத்து ரூ. 6 லட்சம் திருடிய தினேசை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe