கோவையில் சொந்த தொழில் தொடங்க ஊழியருக்கு முட்டுக்கட்டை போட்ட பழைய முதலாளி!

published 1 year ago

கோவையில் சொந்த தொழில் தொடங்க ஊழியருக்கு முட்டுக்கட்டை போட்ட பழைய முதலாளி!

கோவை: ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் குமார் (35). கோவை கலெக்டர் அலுவலகத்தில் அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 2011ம் ஆண்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் நகைக்கடையில் பணிக்கு சேர்ந்தேன்.

பின்னர் கடந்த ஆண்டு கடை உரிமையாளரிடம் பணியில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தேன் அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

அதன் பின்பு பணியில் இருந்து விலகிய நான் தனியாக நகைக்கடை ஆரம்பிக்கலாம் என்று திட்டமிட்ட போது அதனை தெரிந்து கொண்ட கடை உரிமையாளர் என் மீது 750 கிராம் தங்கம் கையாடல் செய்ததாக போலீசில் புகார் அளித்தனர்.

இதனை அடுத்து போலீசார் தன்னை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் நான் வெளியே வந்தேன். இதனையடுத்து எனது மனைவி பெயரையும் இந்த வழக்கில் சேர்த்தனர்.

இந்நிலையில் நகைக்கடை உரிமையாளரும் அவரது மகனும் சேர்ந்து பழிவாங்கும் நோக்கத்தோடு அடியாட்களை வைத்து எங்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

மேலும் எங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழியை ஒத்துக் கொள்ளுமாறும் மிரட்டுகின்றனர். அச்சுறுத்தல் கொடுக்கின்றனர்.

எனவே இது குறித்து நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe