கோவையில் அழகு நிலையத்தில் விபச்சாரம்- பெண் புரோக்கர் உட்பட 5 பேர் கைது...

published 1 year ago

கோவையில் அழகு நிலையத்தில் விபச்சாரம்- பெண் புரோக்கர் உட்பட 5 பேர் கைது...

கோவை: கோவையில் அழகு நிலையத்தில் விபசாரம் நடத்தியதாக பெண் புரோக்கர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிமாநில பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்று வருவதாக காட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். 

அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து அழகு நிலையம் என்ற பெயரில் விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விபசாரம் நடத்திய கேரளா பாலக்காட்டை சேர்ந்த அழகு நிலைய வரவேற்பாளர் சுஜீஸ்(39), பெண் புரோக்கர்கள் கேரளா கோட்டயத்தை சேர்ந்த ஸ்டெபி மோல்(34), மைசூரை சேர்ந்த நாகம்மா(36), அக்‌ஷதா(33), பெங்களூரை சேர்ந்த ராணி(29) ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe