கோவையில் சவரத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…

published 1 year ago

கோவையில் சவரத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலக முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் டி.கே ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கல்வி மற்றும் ஒன்றிய, மாநில அரசு வேலை வாய்ப்புகளில் மருத்துவ சமுதாய மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவம் மற்றும் மருத்துவம் மேற்படிப்புகளுக்கு 10 சதவீத இலவச கல்வி வழங்க வேண்டும்,  முடி திருத்துவோர் நல வாரியத்திற்கு மருத்துவ சமுதாயத்தை சார்ந்தவரை வாரிய தலைவராக நியமிக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. 

இதில் ஏராளமான சவரத் தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe