கோவையைச் சேர்ந்த இளைஞர் லண்டனில் கொலை...!

published 11 months ago

கோவையைச் சேர்ந்த இளைஞர் லண்டனில் கொலை...!

கோவை: கோவையைச் சேர்ந்த இளைஞர் லண்டனில் கொலை செய்யப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ் பட்டாபிராமன் (வயது 36). திருமணமானவர். இவர் லண்டன் நகரில் உள்ள தென்னிந்திய உணவகம் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வந்தார்.

இதனிடையே கடந்த 14ஆம் தேதி உணவகத்தில் வேலையை முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் விக்னேஷ்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விக்னேஷ் படுகாயம் அடைந்தார். மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்கின்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார்  இது தொடர்பாக 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே விக்னேஷின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். ஜஸ்ட் கிவ்விங் என்ற கிரவுட் பண்டிங் மூலமாக நிதி திரட்டப்பட்டு வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe