காய்கறி காரரிடம் கத்திமுனையில் பணம் மற்றும் செல்போன் பறிப்பு- கூகுள் பே விலும் பணத்தை வாங்கிய 5 பேர் கைது...

published 11 months ago

காய்கறி காரரிடம் கத்திமுனையில் பணம் மற்றும் செல்போன் பறிப்பு- கூகுள் பே விலும் பணத்தை வாங்கிய 5 பேர் கைது...

கோவை: கோவை போத்தனூர் அருள்முருகன் நகரை சேர்ந்தவர் முகமத் உசேன்(30). இவர் டிகே மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இநிலையில், நேற்று முன்தினம் முகமத் உசேன் பைக்கில் தனது நண்பர் சுப்பிரமணியன் என்பவருடன் சென்று கொண்டிருந்தார். அவர்கள் குறிச்சி குளக்கரை அருகே சென்று கொண்டிருந்த போது 5 பேர் கும்பல் அவர்களை வழிமறித்தனர். 

பின்னர் கத்திமுனையில் மிரட்டி பணம் கேட்டனர். முகமத் உசேன் பணம் கொடுக்க மறுத்ததால் அவரை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்தனர். பின்னர் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ. 3,500 ஐ பறித்தனர். மேலும் அவரது செல்போனில் உள்ள கூகுள் பே மூலம் ரூ. 9800 ஐ தங்களது கணக்கிற்கு வரவு வைத்து மிரட்டி விட்டு சென்றனர். 

இது குறித்து முகமத் உசேன் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வியாபாரியை மிரட்டி பணம், செல்போன் பறித்தது குனியமுத்தூர் இடையர்பாளையத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான்(33), கோவைப்புதூரை சேர்ந்த சுதீர்குமார்(30), பொள்ளாச்சியை சேர்ந்த ஹக்கீம்(30), குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த முகமத் ஆசிக்(29), குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சாதிக்(30) என்பது தெரியவந்தது. போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe