கோவையில் நீ என்ன இந்த ஏரியாவில் பெரிய ரவுடியா? என கேட்டு தகராறு!

published 11 months ago

கோவையில் நீ என்ன இந்த ஏரியாவில் பெரிய ரவுடியா? என கேட்டு தகராறு!

கோவை: கோவையில் நீ என்ன பெரிய ரவுடியா என கேட்டு வாலிபரை தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பிள்ளையார்புரம் கஸ்தூரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் மாகாலி(20). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள மளிகைக்கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மாகாலியை பார்த்து நீ என்ன இந்த ஏரியாவில் பெரிய ரவுடியா? என கேட்டு தகராறு செய்தார். இதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி மாகாலியை சரமாரியாக அடித்து உதைத்தார்.

இது குறித்து மாகாலி சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மாகாலியை தாக்கியது சுந்தராபுரம் பிள்ளையார் புரம் கஸ்தூரி கார்டனை சேர்ந்த டிரைவர் ஷாரூக்கான்(26) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe