10 ஆண்டுகளில் முதன்முறையாக வேலை நாட்களில் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்கள்...

published 11 months ago

10 ஆண்டுகளில் முதன்முறையாக வேலை நாட்களில் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்கள்...

கோவை: ஊதிய முரண்பாட்டை கலைய வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்(SSTA) கடந்த 10 ஆண்டுகளாக போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். 

 

இந்நிலையில் இன்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பும் தொடர் போராட்டத்தை துவக்கி உள்ளனர். அதன்படி கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஊதிய முரண்பாட்டை கலைய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இதில் கலந்து கொண்டவர்கள் சம வேலைக்கு சம ஊதியம், ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஊதிய குழுவின் செயல்முறைகளின் படி ஒரு குழுவிற்கு ஒரு அடிப்படை ஊதியம் தான் கொடுக்க வேண்டும் எனவும் ஆனால் ஆறாவது ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு வகையான அடிப்படை ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு 8370 ரூபாய் ஊதியமும் அதன் பிறகு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு 5200 ரூபாய் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது என தெரிவித்த அவர்கள் இதனால் சுமார் 3000 ரூபாய் க்கு மேல் முரண்பாடு ஏற்படுவதாகவும் இந்த ஊதிய முரண்பாட்டை உடனடியாக கலைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

கடந்த 10 ஆண்டுகளாக விடுமுறை நாட்களில் மட்டுமே போராட்டம் நடத்தி வந்தவர்கள் வேலை நாட்களில் போராட்டம் நடத்துவது இதுவே முதன்முறையாகும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe