கோவையில் ஆசிரியர்கள் திடீர் தர்ணா போராட்டம்!

published 11 months ago

கோவையில் ஆசிரியர்கள் திடீர் தர்ணா போராட்டம்!

கோவை: கோவையில் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நடைபெற உள்ள 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கோவையில் ஆசிரியர்களுக்கு வெகு தொலைவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆசிரியர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து 30 முதல் 90 கி.மீ., வரை தேர்வு மையத்தில் பணி  செய்ய கல்வித்துறை உத்தரவிட்டதற்கு முதுகலை பட்டாதாரி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கல்வித்துறை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், பள்ளியில் இருந்து 10 கி.மீ., தொலைவிற்குள் தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

இன்று இரவுக்குள் மறு உத்தரவை பிறப்பிக்காவிட்டால் நாளை முதல் தொடர் தர்ண போராட்டம் நடத்த உள்ளதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe