கோவையில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் சிரமத்திற்குள்ளான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்...

published 11 months ago

கோவையில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் சிரமத்திற்குள்ளான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்...

கோவை: கோவை ரயில் நிலையம் அருகே லங்கா கார்னர்  சாலையில் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டு கழிவு நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ரயில் நிலையம் வரும் பயணிகளும் சாலையின் பயணிக்கும் வாகன ஓட்டுகளும், பாதசாரிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சில தினங்களுக்கு முன் இப்பகுதியில் சாலைகள் பணிகள் நிறைவடைந்து புதிய சாலை அமைக்கப்பட்ட நிலையில் தற்போது ஏற்ப்பட்டுள்ள இந்த கழிவு நீர் வெளியேற்றம் பொதுமக்களை சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளது.

இப்பகுதியில் அடிக்கடி கழிவுநீர் வெளியேறுவதாகவும் மழை காலங்களில் மழை நீர் தேங்கி கொள்வதாலும், அடிக்கடி சிரமங்கள் ஏற்படுவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காணும் படி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe