வெள்ளலூர் பகுதியில் வீட்டில் புகுந்து நகை, வெள்ளி திருட்டு…

published 11 months ago

வெள்ளலூர் பகுதியில் வீட்டில் புகுந்து நகை, வெள்ளி திருட்டு…

கோவை: கோவை வெள்ளலூர் கோணவாய்க்கால்பாளையம் அற்புதம் நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார் மனைவி உதயராணி(33). இவர் சம்பவத்தன்று தனது மகனை அழைத்து வர அருகே உள்ள பள்ளிக்கு சென்றார். அவர் வீட்டு கதவை பூட்டாமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. 

 

பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது அலமாரியில் மணிபர்சில் வைத்திருந்த 4 கிராம் நகை, வெள்ளி செயின் திருடு போயிருப்பது தெரியவந்தது. வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் திருடி சென்று விட்டார். 

இது குறித்து உதயராணி போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe