நீலிக்கோணாம்பாளையத்தில் வழிப்பறி

published 11 months ago

நீலிக்கோணாம்பாளையத்தில் வழிப்பறி

கோவை: கோவையில் கத்தியை காட்டி மிரட்டி மெக்கானிக்கிடம் செல்போன், பணம் பறித்த பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதி பாஸ்(40). டிவி மெக்கானிக். இவர் நேற்று நீலிகோணாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பைக்கில் வந்த 2 பேர் திடீரென அவரை கத்தி முனையில் மிரட்டி செல்போன் மற்றும் ரூ. 2800ஐ பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜோதிபாஸ் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் இருவரும் தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து அவர் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன், பணம் பறித்த 2 பேரை தேடி வருகின்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe