சாய்பாபா காலனியில் சிக்கனில் விஷம் வைத்து நாய் கொலை…

published 11 months ago

சாய்பாபா காலனியில் சிக்கனில் விஷம் வைத்து நாய் கொலை…

கோவை: கோவை சாய்பாபா காலனி கே.கே. புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (29). விலங்குகள் நல ஆர்வலர்.

சம்பவத்தன்று இவருக்கு கோவை கவுண்டம்பாளையம் உழைப்பாளர் சாலை வீதியில் 4 நாய்கள்  ரத்த வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் வந்தது. அவர் அங்கு சென்று பார்த்த போது ஒரு நாய் இறந்து கிடந்தது. ஒரு நாய் அங்கிருந்து ஓடிவிட்ட நிலையில் மற்ற 2 நாய்களை மீட்டு வெள்ளக்கிணறு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

பின்னர் சாய்பாபா காலனியில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் நாய்களை பரிசோதித்துவிட்டு மர்மநபர் சிக்கனில் விஷம் வைத்து நாய்களுக்கு கொடுத்திருப்பதாக கூறினார்.

இது குறித்து கோவை துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe