கோவையில் பணம் கேட்டு பெண்னை கொடுமைப் படுத்திய கணவன் மாமியார்...

published 11 months ago

கோவையில் பணம் கேட்டு பெண்னை கொடுமைப் படுத்திய கணவன் மாமியார்...

கோவை: கோவையில் ரூ.7 லட்சம் கேட்டு பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்ததாக கணவர், மாமியார் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை பேரூர் ஜிவி நகரை சேர்ந்தவர் சவுந்தரராஜன்(36). லேத் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கும், ஜாஸ்மின்(37) என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு மருதமலை கோவிலில் காதல் திருமணம் நடைபெற்றது. இரண்டு மகன்கள் உள்ளனர். 

இந்த நிலையில், சவுந்தரராஜனுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜாஸ்மின் தனது கணவருடன் சண்டையிட்டு செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டில் வசித்து வருகிறார். ஒரு மகன் கணவரிடமும், மற்றொரு மகன் ஜாஸ்மினுடன் இருந்து வருகின்றனர். 

இதனையடுத்து ஜாஸ்மின் குடும்பத்தினர் சவுந்தரராஜனிடம் சுமூகமாக பேசி இருவரும் சேர்ந்து வாழ பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சவுந்தரராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் ரூ. 7 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. 

இது குறித்து ஜாஸ்மின் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் சவுந்தரராஜன், அவரது தந்தை சந்திரன், தாய் பிரேமா, சகோதரி நிஷாந்தினி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe