கோவையில் டீ குடித்து கொண்டிருந்த நேரத்தில் பணத்தை திருடிய வாலிபர்கள்…

published 11 months ago

கோவையில் டீ குடித்து கொண்டிருந்த நேரத்தில் பணத்தை திருடிய வாலிபர்கள்…

கோவை: கோவை புலியகுளம் செட்டி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(49). இவர் நேற்று ரயில் நிலையம் எதிரே உள்ள ஒரு பேக்கரியில் டீ குடித்து கொண்டிருந்தார். 

அப்போது அருகே நின்றிருந்த 2 வாலிபர்கள் திடீரென மகேந்திரன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ. 100 ஐ திருடி கொண்டு தப்பிக்க முயன்றனர். இதனை பார்த்து உடனே சுதாரித்த மகேந்திரன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

விசாரணையில் பணம் திருடியது திருச்சி மணப்பாறையை சேர்ந்த சிவா(33) மற்றும் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த நவுசாத்(37) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe