காந்திபுரத்தில் மோதிக்கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்: பயணிகளை ஏற்றுவதில் பிரச்சினை...!

published 11 months ago

காந்திபுரத்தில் மோதிக்கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்: பயணிகளை ஏற்றுவதில் பிரச்சினை...!

கோவை: கோவையில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட மோதலில் ஆட்டோ டிரைவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை காட்டூர் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் செல்வராஜ்(61). ஆட்டோ டிரைவர். இவர் காட்டூர் விவேகானந்தர் ரோடு ஜங்சன் அருகே உள்ள ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்துவது வழக்கம்.

அப்போது பயணிகளை ஏற்றுவதில் இவருக்கும், ஆட்டோ டிரைவர் சசிக்குமார்(53) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று செல்வராஜ் ஆட்டோ ஸ்டாண்டில் தனது நண்பர் ஒருவருடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சசிக்குமார், இங்கு நீ ஆட்களை ஏற்ற கூடாது என கூறி தகராறில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சசிக்குமார் தகாத வார்த்தைகளால் பேசி கம்பியால் செல்வராஜை தாக்கினார்.

தடுக்க முயன்ற அவரது நண்பரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பினார். தாக்குதலில் காயமடைந்த செல்வராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செல்வராஜ் காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை தாக்கிய ஆட்டோ டிரைவர் படேல் ரோட்டை சேர்ந்த சசிக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe