கோவை வியாபாரியிடம் ரூ. 53.58 லட்சம் நூதன மோசடி…

published 11 months ago

கோவை வியாபாரியிடம் ரூ. 53.58 லட்சம் நூதன மோசடி…

கோவை: கோவை சரவணம்பட்டி விசுவாசபுரத்தை சேர்ந்தவர் இளங்கோ டேனியல் (49). பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். 

இவரை கடந்த 25ம் தேதி தாஸ்தாகிரி என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு தான் மகாராஷ்டிராவில் இருந்து பேசுவதாகவும், தங்களது கம்பெனியில் 10 டன் செம்பு கம்பிகள் இருப்பதாகவும், அதனை மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு தருவதாகவும் தெரிவித்தார். 

இதனை நம்பிய இளங்கோ டேனியல் ரூ.53.58 லட்சத்தை தாஸ்தாகிரி சொன்ன வங்கி கணக்கில் செலுத்தினார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட பின்பு அவரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. 

செம்பு கம்பிகளையும் அனுப்பி வைக்கவில்லை. இளங்கோ டேனியல் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இளங்கோ டேனியல் அந்த நபர் மகாராஷ்டிராவில் சொன்ன முகவரிக்கு நேரில் சென்று பார்த்த போது அதேபோன்ற ஒரு கம்பெனி அங்கு இல்லை என்பதும், போலியான முகவரி கொடுத்து செம்பு கம்பிகள் அனுப்புவதாக கூறி ரூ. 53.58 லட்சத்தை மர்ம நபர் மோசடி செய்ததும் தெரிய வந்தது. 

இதனால் பணத்தை இழந்த இளங்கோ டேனியல் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe